பிள்ளையார் ஊர்வலத்தில் குத்தாட்டம் மோதல் காயம்!

ஜி.கே.சேகரன்,

  கிராமத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது நடனமாடுவதில் ஏற்பட்ட  தகராறு! இரு கிராம இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்ட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்காயப்பள்ளி பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களால் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த நிலையில்  விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நடனமாடியதாக தெரிகிறது.

 இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர்.

  இருதரப்பினரும் தாக்கி கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளனர். இதைப் பார்த்த

ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர்.

 மேலும் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவ குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  விநாயகர் சிலை முன்பு குத்தாட்டம் போட்டதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது'