ஆலப்புழா விரைவு ரயிலில் கஞ்சா!

ஆலப்புழா விரைவு ரயிலில் கஞ்சா!

  ஜி.கே.சேகரன்,

  ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல். காட்பாடி இரயில்வே காவல் துறையினர் நடவடிக்கை.

 வேலூர்மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் வழியாக சட்டவிரோதமாக கஞ்சா கடத்தப்படுகிறதா என காட்பாடி இரயில்வே காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 அந்த வகையில் இன்று காட்பாடி ரயில் நிலைய நடைமேடை 1-இல் தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா பயணிகள் விரைவு ரயில் நின்றது.

  அப்போது அந்த ரயிலில் ரயில்வே இருப்பு பாதை போலீசார் ஜெனரல் காம்பார்ட்மெண்டில் சோதனை மேற்கொண்டனர்.

   அப்போது கேட்பாரற்று கிடந்த நீல நிற டிராவல் பேகை ஆய்வு செய்த போது அதில் 8 பண்டல் அடங்கிய 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனை அடுத்து போலீசார் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல இரயில்களில் சோதனை தொடந்தது.