தெனாவட்டு பேசிய மின்வாரிய ஃபோர்மேன்! போலிசிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார்!

தெனாவட்டு பேசிய மின்வாரிய ஃபோர்மேன்! போலிசிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார்!

ஜி.கே.சேகரன்,

விவசாயிகளிடம் தெனாவட்டு பேசிய மின்வாரிய ஃபோர்மேன் போலிசிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார்.

 திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சரியாக இல்லாமல் இருந்துள்ளது.

 அங்கு பொருத்தப்பட்டிருக்கும் டிரான்ஸ்பார்மர் அவ்வப்போது பழுதாகி விடுவதால் மின்சாரத்தை நம்பி பயிரிட்ட விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

 இந்த நிலையில் மின்சார துறைக்கு பலமுறை தகவல் கொடுத்தும் அதனை சீர் செய்யாமல் மெத்தனமாக இருந்துள்ளனர்.

 ஒரு கட்டத்தில் விவசாயிகள் மின்சார ஊழியர்களிடம் கோரிக்கை வைத்த நிலையில் இதற்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளனர்.

 அந்தத் தொகையை உடனடியாக அப்பகுதி விவசாயிகள் மின்சார ஊழியரிடம் கொடுத்துள்ளனர்.இருப்பினும் அந்த ஊழியர் பணத்தைப் பெற்றுக் கொண்டு எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டிருக்கும் நெருப்பயிர்கள் காய்ந்து போய் உள்ளது.

 இதனைக் கண்ட விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்து நாட்றம்பள்ளி - குருபவானிகுண்டா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திம்மாம்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சாலை மறிக்க வேண்டாம் உங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

 அப்போது அவர்கள் நாங்க ஊரைவிட்டு போறோம், இந்தா பிடிங்க இந்த நெல்லை.இதெல்லாம் மின்சாரம் இல்லாமல் வரண்டு போன நெல்கள் என்று போலிசாரிடம் அவற்றை வாரிக் கொடுத்தனர்.

  அவர்களிடம் சமாதானம் பேச முயன்ற போலிசார் தோல்வியடைந்தனர். விவசாயிகள் சமாதானம்  ஆகாததால் மின்சார துறை அதிகாரிகளை வரவழைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின்மாற்றி உடனடியாக சீர் செய்து தருகிறேன் என்று உறுதி கூறியதால் அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 அப்போது அந்த வழியாக வந்த ஃபோர்மேன் ரகுபதி என்பவர் தங்கள் பகுதியில் உள்ள ஒருமுனை மின்சாரத்தை துண்டிக்கிறேன் என்று கூறியதால் அப்பகுதி மக்கள் ஆவேசம் அடைந்த நிலையில் அருகில் இருந்த போலீசார் தேவையில்லாம பேசிட்டு இருக்க வேண்டாம் போய்கிட்டே இரு என்று அனுப்பி வைத்தனர்.

இதனால் அந்த தெனாவட்டு ஃபோர் மேன் சிட்டாய் பறந்து அந்த இடத்தில் இருநு தப்பித்தார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.