மோடி நல்லது செய்தால் முனிஸ்வரனுக்கு ஆடு வெட்டுவதாக எம்.பி.கதிர் ஆனந்த் வேண்டுதல்!
ஜே.தே.பிரகாசம்,
பிரதமர் மோடி ஏதாவது நல்லது செய்தால் முனீஸ்வரனுக்கு ஆடு வெட்டுகிறேன் என வேண்டி உள்ளேன்
வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேச்சு.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலம்பட்டு பகுதியில் தனியார் மண்டபத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகம் நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டு சுமார் ஒரு கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்பு பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கீழே வரும்போது அப்பொழுது பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பெண்களிடம் பேசிய கதிர் ஆனந்த் மோடி ஜெயித்துள்ளார், அவர் வரும் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் போது, அதில் 100 நாள் வேலை திட்டம் தொடருமா அல்லது நிறுத்தப் போகிறாரா என்று தெரியும் , அவர் நிறுத்தத்தான் போகிறார்,
மோடி பொது மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தால் முனீஸ்வரனுக்கு ஆடு வெட்டுவதாக நான் வேண்டிக் கொண்டுள்ளேன் என்று கூறினார்.