வேலூரில் மாம்பழச்சாறு தொழிற்சாலை அமைக்க கோரிக்கை!

ஜி.கே.சேகரன்,
விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை வேலூரில் துவங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டனர். அப்போது விவசாயிகள் பேசுகையில் மா பூக்கள் எடுக்கும் நேரத்தில் பூச்சிகள் தாக்குவதால் என்னென்ன மருந்துகளை தெளிக்க வேண்டும் என்பதை வேளான்மை துறை அறிவுறூத்த வேண்டும்.
இம்மாவட்டத்தில் அதிக அளவு மாம்பழங்கள் விளைகிறது, இங்கு ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லாததால் பழங்களை ஆந்திரா கொண்டு சென்றால் அங்கு மாம்பழங்களை கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள்.
எனவே தமிழக அரசு மா விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மாம்பழம தொழிற்சாலையை இம்மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.
நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அகற்ற வேண்டும், மேலும் வயல் வெளிகளில் அதிக அளவு பாம்புகள் நடமாட்டத்தால் பாம்பு கடித்து விவசாயிகள் இறக்கின்றனர் பாம்பு கடித்து விவசாயிகள் இறந்தால் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
ஆறுகளில் தடுப்பணைகளை கட்டுவதை விரைவுபடுத்த வேண்டும், வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகள் மரம் வளர்ப்பது குறித்து மேலும் விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை வெளிசந்தைக்கு கொண்டு சென்றால் கமிஷன் அதிகமாக கேட்கிறார்கள் அதனை கட்டுபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.