கூடுதல் வகுப்பறை பணிகளை ஆட்சித் தலைவர் பார்வை!

கூடுதல் வகுப்பறை பணிகளை ஆட்சித் தலைவர் பார்வை!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

 காட்பாடி ஊராட்சி ஒன்றியம், குகையநல்லூர் ஊராட்சி, மாந்தாங்கல் கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27.02 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பெ. குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.,  அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  இந்த ஆய்வின்போது உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி)  திரு.பிரசன்ன குமார், இ.கா.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் திருசெந்தில்குமார், காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்,  துணைத் தலைவர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 காட்பாடி ஊராட்சி ஒன்றியம், தேன்பள்ளி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 49.50 லட்சம் மதிப்பில் நான்கு  கூடுதல் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

   இந்த  ஆய்வின்போது உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி)  திரு. . பிரசன்ன குமார், இ.கா.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் திருசெந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.