வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை! ஆட்சியர் பேட்டி!

வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை! ஆட்சியர் பேட்டி!

 ஜி.கே.சேகரன்,

வேலூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சலை தடுக்க சோதனை சாவடிகளில் முழுமையாக மருந்து அடித்து வாகனங்களை மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கிறோம் பறவைகாய்ச்சல் வருவதை தடுக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் ஆந்திர மாநில அருகில் உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது - மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி பேட்டி.

  வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில், கூட்டுறவுத்துறையின் சார்பில் நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு ஊட்டி தேயிலை தூள் வாங்கும் நபர்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவங்கி வைத்தா£.¢ உடன் கூட்டுறவுதுறை இணை இயக்குநர் குண ஐயப்பதுரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்

   பின்னர் ஆட்சியர் சுப்பு லெட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் ஆந்திராவில் ஒட்டி வரும் சேர்க்காடு கிறிஸ்டியன்பேட்டை சைனகுண்டா பரதராமி ஆகிய 4 இடங்கள் சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை செய்து மருந்துகளை அடிகிறோம்.

  இதுவரையில் நமது மாவட்டத்தில் யாருக்கும் பறவை காய்ச்சல் இல்லை, மேலும் கடந்த இரண்டு நாட்களாக ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து அடித்து வருகிறோம் என கூறினார்.