ஏரிக்கரையில் நடைபயிற்சி செய்ய 25 கோடி ஒதுக்கீடு!துரைமுருகன் பேச்சு!

ஏரிக்கரையில் நடைபயிற்சி செய்ய 25 கோடி ஒதுக்கீடு!துரைமுருகன் பேச்சு!

  ஜி.கே.சேகரன்,

 காட்பாடி ஏரி மற்றும் கழிஞ்சூர் ஏரி ஆகிய இரண்டு ஏரிகளில் ரூ.25 கோடி மதிப்பில்  செயற்கை தீவு ஏற்படுத்தப்பட்டு படகு சவாரிக்கு சுற்றுலா தளம் போல் மாற்றப்படும் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

 வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஏரி பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நிரம்பியது. இதனால் மேற்படி ஏரி தண்ணிர் காங்கேயநல்லூர் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டது.

 இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏரி கால்வாயில் பூத்தூவி மரியாதை செலுத்தினார்.

   இதற்கான விழாவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

  பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இன்றைய தினம் பாலாற்றில் அத்திப்பூத்தை போல் பெருக்கெடுத்து வருகிறது.

 அந்த நீர் ஏற்கனவே கால்வாய் வெட்டப்பட்ட காரணத்தால் இந்த கழிஞ்சூர் ஏரியும் காட்பாடி ஏரியும் நிரம்புகிறது.

 ஆனால் இவ்வளவு வெள்ளம் வரும் என்று எங்க்ளுக்கு தெரியாது, வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

 ஆகையால் சாலையை கடந்து மக்கள் செல்லும் இடம் தரைபாலமாக உள்ளது, எனவே இந்த தரைப்பாலம் மேல் உயர்ந்த பாலமாக கட்டி தரப்படும்.

 முன்பெல்லாம் கழிஞ்சூர் ஏரியில் தண்ணீர் எடுத்து பாசனம் செய்தனர் ஆனால் இப்போது பாசனம் கிடையாது ஏரியில் நீர் ஊறுவதால் உப்பு தண்ணீர் நல்ல தண்ணியாக மாறுகிறது.

 இதனை இப்படியே விட்டால் பொது மக்களுக்கு பயன் இருக்காது.

 அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளேன், கரைகளை சுத்தப்படுத்தி ஏரிகளில் மாலை நேரத்தில் படகு சாவரி செய்வதை போல் உருவாக்கினால் மக்களுக்கு பொழுது போக்காக அமையும்.

  காலையில் நடைபயிற்சி செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும் எனவே இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கி இரண்டு ஏரிகளையும் மாற்றியமைக்க உத்தரவிட்டுள்ளேன் அடுத்த ஆண்டு படகு சாவரிகள் இந்த இரண்டு ஏரிகளிலும் துவங்கும் என்று பேசினார்.

  இந்த ஏரி நிரம்பியதால் மக்கள் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்வதுடன் சிறுவர்களும் நீரில் குளித்து விளையாடி மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர் தொடர்ந்து பாலாற்றில் நீர் வருவதால் வேலூர் மாவட்டத்தில் பல ஏரிகள் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.