இலங்கை தமிழர்களின் 236 வீடுகள் கட்டுமான பணியை ஆட்சித்தலைவர் பார்வை!

ஆர்.ரமேஷ்,
ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.11 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 236 வீடுகள் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், மின்னூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.
மின்னூர் ஊராட்சியில் சின்னப்பள்ளிகுப்பம் கிராம இலங்கை தமிழர்களுக்காக மொத்தம் ரூ.11 கோடியே 80 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 236 வீடுகள் கட்டுமான பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வுகளின் போது வீடுகள் கட்டுமான பணிகளை வேலையாட்களை அதிகப்படுத்தி பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வுகளின் போது வட்டாட்சியர் திருமதி.குமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அப்துல்கலீல், உதவி பொறியாளர் திரு.பூபாலன், பணி மேற்பார்வையாளர் திரு.வெங்கடேசன், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.