விநாயகர் சதுர்த்தி விழா! ஆலோசனை கூட்டம் நடத்திய ஆட்சியர்!

விநாயகர் சதுர்த்தி விழா! ஆலோசனை கூட்டம் நடத்திய ஆட்சியர்!

 கு.அசோக்,

  வேலுர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட  வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த. மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பி.விஜயராகவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர்கள், காவல்துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 மேலும், மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி த. மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பி.விஜயராகவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.