ஆட்சியரை பார்த்து உற்சாகமான மாணவிகள்!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவரைப் பார்த்த பள்ளி மாணவிகள் உற்சாகமடைந்து அவருடன் நடை போட்டனர்.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி மணிமொழி, மகளிர் திட்ட இயக்குநர் திரு.நாகராஜன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பானுமதி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் வேலூர் அண்ணா நகர் பகுதியில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் அளித்தவர்களில் விடுபட்ட சில தகவல்களை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் சோதித்தனர். அப்போது பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் ஆட்சியரைப் பார்த்ததும் உற்சாகமானார்கள். இதனால் மகிழ்ந்த ஆட்சியர் மாணவிகளுடன் கல்வி தொடர்பான விவரங்களை விசாரித்துக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்றார்.
மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதினை பெற்ற காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிசு தொகையாக ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
ஆட்சித்தலைவர் அவர்கள் அணைக்கட்டு வட்டம் செதுவாலை கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ள பயனாளியிடம் விவரங்கள் குறித்து நேரடி கள ஆய்வு மேற்கொண்டதுடன், செதுவாலை ஏரியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா எனவும் நேரில் பார்வையிட்டு விசாரித்தார்.
மேலும் வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மொணவூரில் அமைக்கப்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுற்றுசுவர் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
அடுத்ததாக, பொய்கை ஊராட்சியில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்து அம்சங்களையும் சோதனையிட்டார்.
மேலும், அங்கிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கு வந்திருந்த கர்ப்பிணி தாய்மார்களிடம் அவர்களின் சிகிச்சை விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.நிகிதா, அணைக்கட்டு வட்டாட்சியர் திருமதி வேண்டா உட்பட பலர் உடனிருந்தனர்.
தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சியை ஆட்சித்தலைவர் அவர்கள் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர்கள் பேசுகையில், மாணவர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல் - சுய தொழில் துவங்க வேண்டும்.
பொறியியலும் தொழில் நுட்பமும் முக்கியத்துவமானது காரணம் அனைத்துமே இன்றைக்கு தொழில் நுட்பம் சார்ந்து உள்ளது பொறியியற் படிப்பை முடித்துவிட்டு மாணவர்களாகிய நீங்கள் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்க கூடாது சுய தொழிலை உங்கள் தொழில் நுட்ப படிப்பு மூலம் துவங்க வேண்டும் அரசும் பல சலுகைகள் கடனையும் அளிக்கிறது ஆகவே நீங்களை தொழிலை துவங்கினால் முன்னேற்றம் அடையலாம் என பேசினா£.¢இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர்.ஸ்ரீராம் பாபு, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்..மாரிராஜ் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.