முதல்வர் கலந்துக்கொள்ளும் விழாவுக்கு இந்துமுறைப்படி பூஜை!

ஜி.கே.சேகரன்,
என்னதான் சனாதனத்துக்கு எதிர்பாக திமுகவினர் பேசினாலும், எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் பூஜை போட்டே துவங்குகின்றனர்.
வேலூரில் உள்ள கந்தநேரியில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில், அந்த நிகழ்சிக்காக பந்தல் போடும் முன்னர், இரும்பு கம்பத்திற்கு பூஜை போட்டு துவக்கி வைத்தனர்.
வேலூர்மாவட்டம்,கந்தனேரியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில அளவிலான முப்பெரும் விழா வரும் 17 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன் சிறப்புரையாற்றுகிறார்.
இதற்காக பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது. இதில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுகவினர் இந்து முறைப்படி இரும்பு கம்பத்திற்கு கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டி கம்பத்தை வழிபட்டு ஆகாயத்தை நோக்கி வழிபாடு நடத்தி கையெடுத்து கும்பிட்டு பயபக்தியுடன் பூஜை நடத்தினார்கள்
தற்போது சனாதன ஒழிப்பு பேச்சு பரபரப்பான சர்ச்சை கிளம்பி விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் முதல்வர் வருகைக்காக போடப்படும் மாநாடு பந்தலையும் இந்து முறைப்படி பூஜை செய்து துவங்கி வைத்தனர்.
சபாஷ்...!