கொடைக்கானல் ஆசிரமத்துக்கு வந்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்!

ஜீவா,
தமிழக முதலமைச்சரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் கொடைக்கானல் வந்து சென்றுள்ளார்.
இது பற்றின விவரம் வருமாறு,
சாய்சுருதி என்கிற பெயரில் கொடைக்கானல் பகுதியில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இங்கு காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
ஏரிச்சாலையில் உள்ள சாய்சுருதி ஆசிரமத்தில் கடந்த 2 நாட்களாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சாய்சுருதி ஆசிரம நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துர்கா ஸ்டாலின் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொடைக்கானல் வந்தார்.
பின்னர் அங்கிருந்து ஆசிரமத்திற்கு கார் மூலம் சென்ற அவர் காயத்ரிதேவியை வணங்கியதுடன், கும்பாபிஷேகத்தின் போது கோபுரத்தின் மீது ஏறி கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை திரும்பினார்.
மேலும் துர்கா ஸ்டாலின் வருகை ரகசியமாக வைக்கப்பட்து.