எங்க நிலத்தை அபகரிக்க முயல்கிறார்கள்! கலெக்டரிடம் மனு!
கு.அசோக்,
அனைக்கட்டு சேர்ப்பாடி மடையப்பட்டு கிராமத்தில் தனியார் இடத்தை ஆக்கிரமித்து செய்து, திமுகவினர் ஆதரவோடு ஜாதி பெயரை சொல்லி திட்டிகொலை மிரட்டல் விடுப்பதாக - மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைக்கட்டு அருகேயுள்ள சேர்ப்பாடி அடுத்த மடையப்பட்டு கிராமத்த சேர்ந்தவர் அம்பிகா (61) என்பவர் புகார் மனு அளித்தார்.
இவரது நிலத்தை சில திமுக ஆதரவு கும்பல் ஆக்கிரமிப்பு செய்துள்ளது, இதனை தட்டிக்கேட்ட அம்பிகாவை அந்த கும்பல் ஜாதி பெயரை சொல்லி திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது.
இதனால் அம்பிகா வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இன்று தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டும் திமுக ஆதரவு கும்பல் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத்தருமாறு அம்பிகா மற்றும் கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் மனுவை அளித்தனர்.