ஜி.பி.கல்லூரி மாணாக்கள் சுகாதார பேரணி:-

கு.அசோக்.
உலக மருந்தாளர் தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். மேலும் தேர்தல் நேரத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் மக்களுக்கு கைகளுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜிபி பார்மசி கல்லூரி சார்பில் மாணவ மாணவிகள் கொரோனா தடுப்பு குறித்து விளம்பரப் பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.
ஜி.பி.கல்வி நிறுவனர் பொன்னுசாமி தலைமையில் நடந்த இந்த பேரணியில் முதல்வர் தீன்குமார் மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவர் பிரபாகரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
மேலும் முகக் கவசங்கள் அணியாத பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினி வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமன்றி பார்மசி ஆசிரியர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.