பெட்டிஷன் கொடுத்த மறுதினமே நடவடிக்கை! திருப்பத்தூர் ஆட்சியரின் துரித நடவடிக்கை!

ம.பா.கெஜராஜ்,
கள்ளச்சாராயம் தொடர்பாக, பெட்டிஷன் கொடுத்த மறுதினமே திருப்பத்தூர் ஆட்சியர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் துரித நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்களிடம் பாச்சல் ஊராட்சியை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் விற்பனையாவது தொடர்பாக மனுவினை வழங்கினார்கள்.
இம்மனுவினை உடனடியாக உதவி ஆணையரிடம் வழங்கிய ஆட்சியர் இரகசியமாக விசாரனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்கள். பின்னர், அன்றைய தினமே 2 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மறுநாள் 18.04.2023 விசாரனை மேற்கொள்ளப்பட்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்வது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மது விற்பனை குறைவாக உள்ள கடைகளை விபரங்கள் கோறப்பட்டு, கடந்த ஓராண்டாக மாதம் தோறும் எத்தனை சதவிகிதம் அளவிற்கு குறைவாக விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை கணக்கீடு செய்து, அந்த விவரங்களை பெற்று அந்த விவரங்களை மேப்பிங் செய்யப்பட்டது.
பின்னர் எந்தெந்த பகுதிகளில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடைய மதுபானங்கள் மாவட்டத்திற்குள் வருகிறது என்றும் குறைவாக விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு அருகாமையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யபடலாம் என்பதையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை கொண்ட கூட்டம் நடத்தப்பட்டு, அக்கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்களை கலந்துகொள்ள செய்யப்பட்டது. இதன் மூலம் 122 நபர்கள் மீது வழக்குகள் பதிவுப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கள்ளச்சாராயம் 2,808 லிட்டரும், கர்நாடக மாநில மதுபானங்கள் 3597 பாக்கெட்டுகள், சாராய ஊரல் 24,250 லிட்டர், கஞ்சா 18.3 கிலோகிராம், 3 இருச்சக்கர வாகன பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுபுறத்தை பாதுகாக்கின்ற வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழி பைகளை எடுக்கப்படும் பணிகளில் ஈடுபடும்பொழுது ஆங்காங்கு இருக்கின்ற குப்பைகளில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்ற அந்தபைகளை கண்டறியப்பட்டு, அந்த இடங்களிலும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி வருவாய்த்துறையின் மூலமாக எங்கெல்லாம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என்பது தகவல் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு தகவல்களை கேட்டுபெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அதிக விற்பனைகள் நடைபெறும் கடைகளின் எண்ணிக்கை 2-லிருந்து 26-ஆக உயர்ந்துள்ளது. இதனால் கள்ளச்சாராயம் வெளி மாநில மதுபானங்கள் பயன்பாடு குறைந்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.