கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பு! பேப்பர், மூலப்பொருட்கள் பறிமுதல்!

 கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பு! பேப்பர், மூலப்பொருட்கள் பறிமுதல்!

  ஜி.கே.சேகரன்,

குடியாத்தம் பகுதியில் கள்ளநோட்டு தயாரிக்கும் பேப்பர் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல்-6 பேரை பிடித்து போலீசார் விசாரணை.

  வேலூர் மாவட்டம் , குடியாத்தம் ஜீவா நகர் பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கள்ளநோட்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

 தொடர்புடைய 6 பேரை மடக்கிபிடித்து விசாரணை மேற்கொண்டதில்,பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரூபாய் நோட்டு தயாரிக்கும் பேப்பரை ஒருவரிடம் இருந்து வாங்கி உள்ளார்.

  அதனை எப்படி ரூபாவாக மாற்றுவது என தெரியாமல் பக்கத்து ஊரான கொல்லமங்கலம் கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் என்பவரை நாடியிருக்கிறார்.

 அதில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு கலர் நோட்டுகளை கொடுத்து இதனை கெமிக்கல் மூலம் பணம் தயார் செய்து எனக்கு ஒரு பங்கை கொடுக்கும்படி பேப்பரை கொடுத்துள்ளார்.

 இது பற்றின நுணுக்கக்களுக்காக அலசிய போது கள்ள நோட்டு விவரம் அசோக் குமார், மூர்த்தி, சரவணன்,மோகன் மற்றும் குமார் என்பவர்களுக்கு விவரம் பரவியது.

  மேலும் தயாரிப்பு செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் கைமாறியிருக்கிறது. இதில் ஏற்பட்ட தகறாறில் கள்ள நோட்டு மேட்டர் வெளியில் கசிந்தது. அதன் பேரில் இந்த கும்பல் இப்போது போலிசாரிடம் இவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.