தீவிர ஆய்வு நடத்திய இராணிப்பேட்டை ஆட்சியர்!

தீவிர ஆய்வு நடத்திய இராணிப்பேட்டை ஆட்சியர்!

 ஜி.கே.சேகரன்,

 இராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் விவசாயிகளுடன் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு.

  இராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஈ நமாஸ் மூலம் விவசாயிகள் மற்றும் நெல் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்களின் நேரடி விற்பனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

   அங்கு நடைபெறும் பணிகளைக் குறித்து விவசாயிகள் மற்றும் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

   இதனைத் தொடர்ந்து வேலம் ஊராட்சி பகுதியில் வேளாண் துறையின் மூலம் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் மூலம் நடவு செய்யப்பட்டுள்ள பாகற்காய் தோட்டத்தினை பார்வையிட்டு இதன் மூலம் பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய லாபம் குறித்து கேட்டறிந்தார்.

  ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சோளிங்கர் வெங்கடாபுரம் ஊராட்சியில் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் மூலம் கரும்பு சாகுபடி செய்யப்படுவதையும் நேரடி நெல் விதைகள் மூலம் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பயன்கள் மற்றும் பயிர்களின் அதன் தன்மைகள் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண் தோட்டத்துறையில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.