திமுக அரசைக்கண்டித்து சோளிங்கரில் அதிமுகவினர் ஆர்பாட்டம்!

கு.அசோக்,
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றிய அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் முன்பாக நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சோளிங்கர் ஒன்றிய செயலாளர்கள் ஏஎல்.விஜயன்,பெல். கார்த்திகேயன் தலைமை தாங்கினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் கலந்து கொண்டு சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அத்தியாவசிய கூட்டங்களை உயர்வை திரும்ப பெற வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள்விற்பனை அதிகரித்துள்ளதையும் , சட்ட ஒழுங்கு சீர்படுத்தாத திமுக அரசு கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் உடனடியாக கட்ட வேண்டும், 9 கோடியில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் ராமு, ஏஎல் சாமி மற்றும் கிழக்கு மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.