தலைமை ஆசிரியரை வாழ்த்திய இரா.முத்தரசன்!

தலைமை ஆசிரியரை வாழ்த்திய இரா.முத்தரசன்!

க.பாலகுரு,

 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பாக தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெரும் கோட்டூர் ஒன்றியம் ஆலாத்தூர் நடுநிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் திரு.நா.கலைச்செல்வன் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் இரா.முத்தரசன்  பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

  இந்நிகழ்வில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவருமான காமராசு, கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளருமான வை.செல்வராஜ், கலை இலக்கிய பெருமன்ற பொருப்பாளர்கள் சந்திரசேகரன், பிச்சைக்கண்ணு, செல்லமணி ஐயப்பன், தமிழ்ச் செல்வி.கலியபெருமாள், இராமையன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.