உலக அறநெறி தினம்:- திருமாவளவினிடம் கோரிக்கை!!

உலக அறநெறி தினம்:- திருமாவளவினிடம் கோரிக்கை!!

க.பாலகுரு

  செப்டம்பர்  2  இரண்டாம் உலகப்போர் நினைவு ( World Moral Day )  உலக அறநெறி தினமாக அறிவிக்க வலியுறுத்தி சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளனிடம்  ( WHD )  பன்னாட்டு தொண்டு அமைப்பினர் வலியுறுத்தல்.

   வேர்ல்ட் ஹுமானிட்டேரியன் டிரைவ் ( WHD )பன்னாட்டு தொண்டு அமைப்பு சார்பில் நிறுவனர் தலைவர் டாக்டர். அப்துல் பாசித் சையத் ஆலோசனையின் படி  செப்டம்பர்  2  இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை  வெளிநாட்டினர் உலக வெற்றி தினமாக கடைப்பிடிப்பதை மாற்றி அன்றைய தினத்தை ( World Moral Day)   உலக அறநெறி தினமாக அறிவிக்க தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களிடம்  ஆதரவு கேட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் அமைப்பின்  மாநில தலைவர்கள் உலக  மீனாட்சி சூர்ய பிரகாஷ்  வேளச்சேரியில் உள்ள  விடுதலை சிறுத்தை கட்சி அலுவலகத்தில்  சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச்செயலாளர்  எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன்

அவர்களை சந்தித்து   We Support world moral day என்ற  பதாகையை வெளியிட்டு ஆதரவு  கோரினர்.

  அதனை தொடர்ந்து அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் உள்ள ஆனந்தம்  முதியவர்களுக்கான இலவச காப்பகத்தில் ஆதரவற்றுள்ள மாணவ மாணவியர்களுக்கு  மதிய உணவு வழங்கி  மரக்கன்றுகள் நட்டனர் இதில்  ( WHD )  பன்னாட்டு தொண்டு அமைப்பின் நிர்வாகிகள்  ஹேமா, சரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதுகுறித்து WHD   பன்னாட்டு தொண்டு அமைப்பின் மாநில தலைவர்  மீனாட்சி சூர்யபிரகாஷ் கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில்  சந்தித்து செப்டம்பர்  2  இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை உலக அறநெறி தினமாக அறிவிக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார்.