கோவை விஷயத்தில் தமிழக அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கோவை விஷயத்தில் தமிழக அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

 ஜான்.மரியஜோசப்.

கோவை கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் காரசார பேட்டியளித்துள்ளார்.

கோவை விஷயத்தில் தமிழக அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் சரியான நடவடிக்கை வேண்டும், இல்லையெனில் மத்திய அரசு தலையிடும் என்று பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சொன்னார்.

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கோட்டையில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் செயல்களை கண்காணிக்க தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன் தான் தீபாவளி சமயத்தில் மக்களை காப்பாற்றியுள்ளார்.

 சம்பவம் நடந்ததும், உடனே டிஜிபி வருகிறார். அது பாராட்டுக்குரியது. மிகச்சிறந்த அதிகாரிகளை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நியமித்தார்கள். தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இங்கு வந்தாலும் இவர்களுக்கு அடிபணிந்து தான் இருக்கும் நிலையுள்ளது. தமிழக அரசு தீவிரவாத செயல்களை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

    இது தீவிரவாதிகளின் ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் வித்திடுகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் காஷ்மீரில் பெரும்பகுதி அமைதி பூங்காவாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுத்தால் தான் தீவிரவாதத்தை தடுக்க முடியும்.

  கோவை விஷயத்தில் தமிழக அரசு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் சரியான நடவடிக்கை வேண்டும், இல்லையெனில் மத்திய அரசு தலையிடும் என்றார்.

 மேலும்,  கைப்பற்றப்பட்ட வெடி மருத்துகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து தீவிரவாதத்தை அடக்கி ஒடுக்குவது தான் தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குவதற்கு ஒரே வழி. அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விசாரணை நடைபெற வேண்டும்.

   வெடிமருந்து அளவை வெளியிடுவதில் தயக்கம் ஏன்? 1.5 டன் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசியல் இயக்கமாக வெற்றிகரமாக இயங்க தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். என்று சி.பி.ராதாகிருஷ்ணன் சொன்னார்.