ஐந்து கஞ்சா விற்பனையாளர்கள் மீது குண்டர் சட்டம்!

கு.அசோக்,
அரக்கோணத்தில் பல்வேறு பகுதியில் கஞ்சா வியாபாரிகளாக இருந்த ஐந்து இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சட்டத்தில் அடைத்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அரக்கோணம் நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரக்கோணத்தில் இளம் வயது பிரபல கஞ்சா வியாபாரிகளான அரக்கோணம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் -22 அஜித்குமார் (எ)பார்போஜி கௌதம் -25 சசிகுமார் (எ)கௌதம்-26 கௌதம் -21தீலிப் (எ) தீலிப் -26 ஆகிய ஐந்து நபர்களின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் பரிந்துரையின் பேரில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைப்பதற்கான உத்தரவினை வழங்கியுள்ளார்.
இந்த உத்தரவினை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் சிறைகாவலர்களிடம் ஐந்து நபர்களையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து உத்தரவு ஆணையினை வழங்கிய பின்னர் வேலுர் மத்திய சிறையில் அடைத்தனர்.