ஷெட்டிலிருந்து புறப்பட்ட லாரி மரத்தில் மோதியது!

ஷெட்டிலிருந்து புறப்பட்ட லாரி மரத்தில் மோதியது!

 க.பாலகுரு,

 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் காமராஜர் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மணிவண்ணன் வயது 29.  இவரும் இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் வயது 24 என்பவர் நன்னிலம் அருகே சன்னாநல்லூர் பகுதியில் லாரியை பழுது நீக்கம் செய்துவிட்டு அங்கிருந்து மணிவண்ணன் என்பவர் ஸ்ரீவாஞ்சியம் நோக்கி லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார்.

   அப்போது நன்னிலத்தில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் உள்ள மாப்பிள்ளைகுப்பம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டு இழந்த லாரி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் மணிவண்ணன் படுகாயங்களுடன் உயிர் தப்பினார் மேலும் ராகுல் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். 

  அங்கிருந்த பொதுமக்கள் இருவரை நன்னிலம் நாளைய பாரதம் இலவச ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா.¢ அங்கு மணிவண்ணன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சென்ற லாரி திடீரென சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.