பொதுமக்களுக்கான சேவைகள் தங்கு தடையின்றி செயல்பட உறுதிப்படுத்த வேண்டும்! அதிகாரிகளுக்கு ஆட்சியர் அட்வைஸ்!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அதன் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்களையும் நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து, தாங்கள் பகுதிகளில் அரசு அனுமதித்துள்ள பணிகள் நடைபெறுவதையும் அப்பகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதில் குறிப்பாக வரும் கோடை காலங்களில் தங்கள் பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லா நிலைப்பாட்டினை தாங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இது குறித்து தேவைகள் ஏதேனும் இருப்பின் தாங்கள் கோரிக்கை மனுக்களாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டு, சிறப்பான முறையில் ஊராட்சிகள் செயல்பட்டு இதன் மூலம் தமிழக வளர்ச்சிக்கு நம் மாவட்டம் தமிழகத்திற்கு எடுத்துக்காட்டாக இருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களிடம் அரசு அனுமதித்தவாறு நாள்தோறும் நடைபெறும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தங்கு தடையின்றி செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது உங்களது பணிகளாகும் என தெரிவித்து, அதேபோன்று ஏதேனும் அப்பகுதி சார்ந்த குறைகள் இருப்பின் அதை தெரியப்படுத்தும் வண்ணம் அத்துறைகளின் சார்பாக உடனுக்குடன் நிவர்த்திகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்தார்.
தாங்கள் பணிகள் மேற்கொள்வதில் அதிக கவனத்துடன் தொய்வின்றி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து ஊராட்சிகளில் நடைபெறும் அரசின் திட்ட பணிகள் கட்டடம் மற்றும் பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை நேரடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை துரிதப்படுத்தவும் மற்றும் தரமான முறையில் செயல்படுத்திடவும் அவ்வப்போது துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, நடைபெறும் பணிகள் குறித்த தகவலினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக பதிவேடுகள் மற்றும் ஒப்பந்த ஆவணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வாயிலாக நடமாடும் போக்குவரத்து வாகனத்தில் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு புகைப்பட காட்சியினை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிட ஏதுவாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
அந்த வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் அதற்கான துவக்க நிகழ்வினை மேற்கொண்டு, பொதுமக்களுடன் கண்டுகளித்தார். அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம் கோட்டம்) கிளை மேலாளர் திரு.குமரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.