காரை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிய விஜய்! வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திணறல்!

காரை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு திரும்பிய விஜய்! வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் திணறல்!

ம.பா.கெஜராஜ்,

  சைதை துரை சாமியின் மகன் வெற்றி துரைசாமி  இமாச்சல பிரதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தினால் சட்லெஜ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள், நாடெங்கிலும் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அஜித் உள்ளிட்ட நடிகர்கள் என பலரும் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 இந்நிலையில் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது காரில் வந்து கொண்டிருந்தார். விஜய் வருவதை அறிந்ததும் ஏராளமானோர் அண்ணா சாலையில் கூடினர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்கூட்டம் கூடவே பாதி வழியிலேயே காரை நிறுத்தி விஜய் வீடு திரும்பினார்.

 பின்னர் விஜய் உடன் வந்த புஸ்ஸி ஆனந்த், சைதை துரைசாமியின் வீட்டிற்கு வந்து வெற்றியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார், சைதை துரைசாமிக்கு விஜய் சார்பாக ஆறுதல் தெரிவித்த அவர், போக்குவரத்து ஸ்தம்பிக்கவே விஜய் பாதி வழியிலேயே திரும்ப வேண்டிய சூழல் உருவாகிவிட்டது என்று அவர் அப்போது துரைசாமியிடம் சொன்னார்.