மர்ம காய்ச்சலால் மாணவி பலி!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காப்பட்டு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான அரவிந்தன்- திவ்யா இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ள நிலையில் மூத்த மகள் பிந்து ஸ்ரீ (வயது 10) இவர் சிக்கனாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் காரணமாக பாதிக்கபட்ட நிலையில் நேற்று அதிகாலை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை பள்ளி மாணவி பிந்துஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார்..
வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.