பைக் திருடன் சிக்கினான்!

கு.அசோக்,
தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது . அவரிடம் இருந்துரூ.2 லட்சம் மதிப்பிலான 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 1 வருடமாக தொடர் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஸ்ரீதர் ( 23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன தணிக்கையின் போது நகர காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு இருசக்கர வாகனங்கள் 4 பறிமுதல் செய்ததுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.