. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்ட பேரவைக் கூட்டம்!

. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்ட பேரவைக் கூட்டம்!

T.Md Irfan,

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 5ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிகழ்வுகள், கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்டுக்கு இருமுறை பேரவைக் கூட்டத் தொடர் நடத்தப்படும் நிலையில், அடுத்த ஆண்டின் முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

 இந்த நிலையில், ஜன.,5ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்று குறைந்துள்ளதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கூட்டத் தொடரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பாக தற்போது வரை எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

அதில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.