ஆடல் பாடலுடன் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு!

கு.அசோக்,
நெமிலியில் ஆடல் பாடலுடன் நடைபெற்ற முன்னாள் மாணவர்களின் 4 ஆம் ஆண்டு சந்திப்பு சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் குடும்பத்துடன் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் 1986-1987 பததாம் வகுப்பு மாணவர்கள் நான்காம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தங்களுடன் பயின்ற சந்திராயன்-3 விஞ்ஞானி அப்துல் ஹமீதுக்கு பாராட்டு விழா, வாழ்நாள் சாதனையாளர்கள் சமூக சேவகர்கள் பாராட்டு விழா மற்றும் நண்பர்களின் சங்கம விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 1986-1987 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் வாழ்த்தி மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் நெமிலியில் உள்ள நண்டு பிராண்ட் உரிமையாளர் கடிகாசலம், நெமிலி பாலா பீடத்தின் பீடாதிபதி எழில்மணி, டாக்டர் நடராஜன், தொழிலதிபர் பசுபதி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்தனர்.
அதனை அடுத்து தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை கௌரப்படுத்தி அவர்களிடம் ஆசி பெற்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களையும், தங்கள் பள்ளி காலங்களில் நிகழ்ந்த நினைவுகளையும் நினைவு கூர்ந்து பேசி மகிழ்ந்தனர். பல்வேறு துறைகளில் உள்ள இவர்கள் அவரவர்கள் துறை சார்ந்த அனுபவங்களையும் அறிவுரைகளையும் வழங்கினர்.
தன்னுடன் பயின்ற விஞ்ஞானி அப்துல் அமைதுக்கு கௌரவப்படுத்தி விருதுகளை வழங்கி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். தங்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளை கண்ட மகிழ்ச்சியில் உணவுகளை மாறி மாறி ஊட்டி மகிழ்ந்தனர். இறுதியாக நினைவாக ஒன்றாக அமர்ந்து குழு புகைப்படம் எடுத்தனர்.