வாணியம்பாடி பட்டு கூடு அங்காடியில் தில்லாலங்கடி! விவசாயிகள் கண்ணிர்!

வாணியம்பாடி பட்டு கூடு அங்காடியில் தில்லாலங்கடி! விவசாயிகள் கண்ணிர்!

 டி.முகமது இர்ஃபான்,

வாணியம்பாடி அரசு பட்டு கூடு அங்காடியில் தில்லாலங்கடி வேலைகள் நடக்குது, அது ஒரு மர்ம தேசமாகவே காணப்படுகிறது.  பட்டு கூடுகளுக்கு உரிய விலை கொடுக்காததால்  விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து பட்டு கூடுகளை வெளி மாநிலத்திற்கு எடுத்து சென்ற விற்று வருகிறார்கள் என்று விவசாயிகள் கண்ணிர் வடிக்கிறார்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியில்  அரசு பட்டு கூடு அங்காடி இயங்கி வருகிறது. இது பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலக வளாகமும் கூட.

 இங்கே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கப்பட்ட பட்டு கூடுகள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடி அலுவலகத்தில் விவசாயிகள் கொண்டுவரும் பட்டு கூடுகளை உரிய விலைக்கு எடுக்காமல் குறைவான விலைக்கு கேட்பதால், பட்டு விவசாயிகள் வேதனை அடைந்து பட்டு கூடுகளை வெளி மாநிலத்திற்கு எடுத்து சென்று விற்று வருகிறார்கள்.

 இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 400 பட்டு வளர்ப்பு விவசாயிகள் உள்ளதாக அரசுக்கு அதிகாரிகள் கணக்கு காட்டி உள்ளனர்.

   ஆனால் 11 விவசாயிகள் மட்டுமே கூடுகளை கொண்டு வந்து இங்க போடுகிறோம்.

   ஆனால் அந்த 11 விவசாயிகளுக்கு கூட உரிய விலை அதிகாரிகள் கொடுப்பதில்லை. வெளி மாநிலத்திற்கு சென்று கூடுகள் கொடுத்தால் கூடுதல் விலை கிடைக்கின்றது.

   கர்நாடகா மாநிலம் ராம் நகரில் ஒரு கிலோ பட்டு கூடு ரூ.670 க்கும், ஆந்திராவில் 570 க்கு கொள்முதல் செய்யும் நிலையில் வாணியம்பாடியில் வெறும் 350 க்கு விலை நிர்ணயம் செய்கின்றனர்.

  இதில் அலுவலர்கள் ஏதோ தில்லுமுல்லு செய்கிறார்கள். அரசாங்கம் எங்களுக்கு அளிக்கும் திட்டங்களை அவர்கள் வாயில் போட்டுக் கொள்கிறார்கள். வாணியம்பாடி பட்டு சென்டர் ஒரு மர்ம தேசமாகவே விளங்குகிறது.

 ஆக, பட்டு விவசாயிகள் கொண்டுவரும் பட்டு கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அலுவலர்களின் தில்லாலங்கடி ரூட்டை கண்டு பிடித்து களைய வேண்டும் என்று பட்டு விவசாயிகள்கோரிக்கை வைத்துள்ளனர்.