தொழில் துவங்க கடன் வாங்கி அதனை வட்டிக்கு விடக்கூடாது! வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

கு.அசோக்,
தொழில் முனைவோர்கள் கடனை பெற்று கொண்டு கடனை திருப்பி கட்டாமல் இருக்க கூடாது கடனை திருப்பி கட்ட வேண்டும் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் பேச்சு.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் சுரேஷ்குமார், தாட்கோ மேலாளர் பிரேமா உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் திரளான தொழில் முனைவோர்களும் பங்கேற்றனர் இதில் தொழில் முனைவோர்விளக்க புத்தகத்தினை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டு விழாவில் பேசினார்.
பல்வேறு உற்பத்தி தொழில்கள் விதைகள் பன்னை,உரக்கிடங்குகள் அமைப்பது ,சிறு உதிரிபாகங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பல தொழில்களுக்காக கடனை பெற்று நீங்களும் தொழிலதிபராகலாம்.
ஆனால் கடனை வாங்கிவிட்டு அதனை நீங்கள் திருப்பி கட்டவில்லை என்றால் உங்கள் சந்ததியில் இனி யாரும் எந்த அரசு கடனையும் பெற முடியாது, அதனை உணர்ந்து வாங்கிய கடனை திருப்பி கட்ட வேண்டும்.
மேலும் சில தொழில் துவங்க கடன் வாங்கி அதனை வட்டிக்கு விடுகின்றனர் அதுபோன்ற தவறான செயல்களை செய்யாமல் தொழில் முனைவோர்கள் கடனை வாங்கினால் தொழிலை துவங்கிட வேண்டும் அப்போது தான் சமூக பொருளாதார நிலை உயரும் என ஆட்சியர் பேசினார்.