விடுபட்ட கோவிட் மரண சான்று பெற வழிமுறைகள்! ஆட்சியர் அறிவிப்பு!

விடுபட்ட கோவிட் மரண சான்று பெற வழிமுறைகள்! ஆட்சியர் அறிவிப்பு!

விடுபட்ட கோவிட் மரண சான்று பெற வழிமுறைகள்! ஆட்சியர் அறிவிப்பு!

  ம.பா.கெஜராஜ்,

கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுதவியாக ரூ.50,000/-ஐ மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குமாறு உச்சநீதிமன்றத்தால் தீர்ப்புரை வழங்கப்பட்டது.   

  அதனடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000/- நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

          கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் பெயர்கள் அரசால் வெளியிடப்பட்ட அரசிதழில் இடம் பெறாத நேர்வுகளில், அவர்களது இறப்பு கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்டது தானா என்பதை உறுதி செய்து சான்று வழங்குவதற்காக கோவிட்-19 இறப்பு கண்டறிதல் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.

   வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் வேலூர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), வேலூர் உள்ளிட்ட 6-நபர்கள் அடங்கியவர்களால் இந்த மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

  பொதுமக்கள் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பின் அவரது பெயர் அரசால் வெளியிடப்பட்;ட கொரோனாவால் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை எனில், மேலே தெரிவிக்கப்பட்ட கோவிட்-19 இறப்பு கண்டறிதல் என்ற குழுவிற்கு, இறந்த நபர் கோவிட்19 பாதிப்பால் இறந்தார் என்பதற்கான உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும்பட்சத்தில், இக்குழுவானது மருத்துவ ஆவணங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து இறப்பானது கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்டதா என்பது குறித்து முடிவு செய்து, அதற்கான சான்று வழங்கும்.

  எனவே, அரசிதழில் பெயர்கள் இடம் பெறாத இறந்த நபர்களின் வாரிசுகள் இந்த குழுவிற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

   விண்ணப்பங்கள் வேலூர் அரசு பெண்ட்லேன்ட மருத்துவமனையில் அமைந்துள்ள இணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், வேலூர் அவர்களின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

   இக்குழுவிற்கு மனு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் பேரிடர் மேலாண்மை ஆணைய உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண;. "1077" (அ) 0416-2258016 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு  திரு.பெ.குமாரவேல் பாண்டியன் ,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

                                                         

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.