மாணவர்கள் மீது வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைக்காது!

மாணவர்கள் மீது வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைக்காது!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

 விருதுநகர் மாவட்டம் திருச்சுழினெ ஏ.முக்குளம் காவல் நிலைய சரகத்தில் உள்ள  முக்குளம் நிலைப் பள்ளி மற்றும் மறைக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர்.

தமிழக அரசு உத்தரவுபடியும், விருதுநகர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனைப்படியும் நரிக்குடி வட்ட ஆய்வாளர் அறிவுரை படியும் ஏ. முக்குளம் அருகே முக்குளம் மேல் நிலைப் பள்ளி மற்றும் மறைக்குளம் மேல்நிலைப் பள்ளிகளில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுத்தல் சம்பந்தமாகவும், மேற்படி குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 முக்குளம் மேல்நிலைப் பள்ளி மற்றும் மறைக்குளம் மேல்நிலைப் பள்ளிகளில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு பற்றியும் மாணவர்களுக்கு போதைப்பொருள் குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினார்கள்.  இதில் ஏ.முக்குளம் சார்பு ஆய்வாளர் அசோக்குமார், கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், சிறிய சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும், மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.

 இதனால் அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்படும், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் வெளிநாடுகளுக்கு சென்று தங்களின் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரமுடியும்.

 செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். செல்போன் மாணவர்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது. என்றும் பேருந்தில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்தும் ,  போக்குவரத்து விதிமுறைகளையும் தலைக்கவசத்தின் அவசியத்தையும், பெற்றோர்களை குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும்குழந்தை திருமணம் தடுத்தல் 1098 செயல்பாடுகள், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப்பொருள் பழக்கத்தில் விடுபடுதல் பற்றியும் அவர் அறிவுரை கூறினார். இதில்  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.