குடியாத்தம் கோர்ட்டை ஏரி நீர் சூழ்ந்தது!

கு.அசோக்,
மழை ஓய்ந்தும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை, குடியாத்தம் நீதி மன்ற வளாகத்தில் ஏரி நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் அவதிபடுகிறார்கள்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகம் கடந்த 20, ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
நீதிமன்றத்தின் பின்புறத்தில் நீதிபதிகள் குடியிருப்பும் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர் மழையின் காரணமாக நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு, பகுதிகளில் ஏரி நீர் புகுந்தது.
மழை நின்று பல நாட்களாகியும் அங்கு தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் மிகவும் சிரமபட்ட நீதிபதிகள் மற்றும் குடும்பத்தினர் வெளியில் வர முடியாமல் வீட்டின் உள்ளேயே இருந்துள்ளனர்.
வருவாய்துறையினர் மூலம் மின் மோட்டார் பயன்படுத்தி நீதிபதி குடியிருப்பை சூழ்ந்திருந்த ஏரி நீர் அப்புறப்படுத்த முயற்ச்சித்துள்ளனர், இருந்தும் அதில் எந்த பயனும் ஏற்படவில்லை.
நீதி மன்றத்துக்கு வருவோர் இந்த ஏரி நீரில் நடந்து தான் செல்ல முடியும்.
இதனால் மன உலைச்சல் அடைந்த நீதிபதிகள் மாவட்ட பொதுப்பணிதுறை அதிகாரி மற்றும் வருவாய்துறையினரை ஏரி நீர் சூழ்ந்த நீதி மன்ற வளாகத்திற்க்கு வரவழைத்து நிலையை நேரில் பார்க்க செய்தனர்.
நீதி மன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகளை ஏரி நீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்ட அதிகாரிகள் ஏரி நீர் வெளியேற்ற மாற்று நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
தற்போது நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பகுதி கடந்த 40, ஆண்டுகளுக்கு முன் ஏரியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.