4 பேர் பலியான சம்பவம்! தலா 2 லட்சம் நிவாரணம் அளித்த முதல்வர்!

தாம்பரம் முரளிதரன்,
சென்னை மறைமலைநகர் அருகே பொத்தேரி பகுதியில் இன்று காலை லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார். சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த பொத்தேரி பகுதியில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று , சாலையை கடக்க முயன்ற 3 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே ஜிஎஸ்டி சாலையில் டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி பொத்தேரி அருகே சாலையை கடக்க முயன்ற மூன்று இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஆறு பேரும் தூக்கி வீசப்பட்டும், உடல் நசுங்கியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் லாரி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நின்று உள்ளது. இதனால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.