அமைச்சர் எ.வ.வேலு பற்றின பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்க சபாநயகருக்கு கடிதம்! டி.ஆர்.பாலு அளித்தார்!!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
பாரத பிரதமர் மோடி, ஸ்மிருதி இராணி ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டி பேசியுள்ளது நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு சபாநாயகர் ௐ பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது, 'இந்தியா' குறித்து தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு கூறியதை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியுள்ளனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சை தவறாக மேற்கொள் காட்டி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கடந்த 5.8.2023 அன்று சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.