கவுன்சிலர் மேடம் பசங்க வசதிக்கு உதவி செய்யுங்க!

உ.சசிகுமார்,
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கஸ்பா, பையர் லைன் பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி சரியில்லாமல் உள்ளது.
43 வது வார்டுக்குட்பட்ட இங்குள்ள பள்ளிக்கூடத்துக்கு கழிவரைக்கு கதவுகள் இல்லை, கழிவறைக்கான ஒரு வசதிகளும் அங்கு இல்லை. எல்லாம் உடைந்து காணப்படுகிறது.
இதனால் அங்கு பயிலும் பிள்ளைங்க இயற்கை உபாதைகள் கழிக்க அதிக சிரம படுறாங்க. இதை மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு செல்வது அந்த வார்டு கவுன்சிலர் திருமதி.ரேகா அன்பு நிதியின் பெறுப்பாகும்.
ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் மவுனம் காக்கிறார்.