34 பணியாளர்களை கழற்றிவிட்ட ஜோலார்பேட்டை நகராட்சி!

34 பணியாளர்களை கழற்றிவிட்ட ஜோலார்பேட்டை நகராட்சி!

 ஜி.கே.சேகரன்,

  ஜோலார்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 34 பேருக்கு பணி இல்லை என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதால் 54 க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுமார் 88 பேர் தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளனர்

 இந்த நிலையில் 54 பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் எனவும் மீதமுள்ள 34 பேருக்கு பணி இல்லை என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரேசன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தின் காலை 7 மணி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும் மீதமுள்ள 34 பேருக்கும் பணி வழங்கவில்லை என்றால் ஜோலார்பேட்டை நகராட்சி முழுவதும் துப்புரவு பணி நடைபெறாது எனவும், தமிழக அரசு இந்த போராட்டத்தை கவனத்தில் கொண்டு 88 பேருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அப்படி தவறினால் இந்த போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.

 மேலும் 34 பேருக்கு பணி இல்லை எனக் கூறிய நகராட்சி அலுவலரின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் செய்தியாளர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரேசன் பேட்டி அளித்துள்ளார்.