மாணவியை தம் இருக்கையில் அமரவைத்த வேலூர் ஆட்சியர்!

மாணவியை தம் இருக்கையில் அமரவைத்த வேலூர் ஆட்சியர்!

 ஜி.கே.சேகரன்,

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல்  - ஒரு மாணவியின் ஆட்சியர் இருக்கையில் அமர வைத்து ஆசையை நிறைவேற்றினார் அரசு பள்ளி மாணவிக்கு மகிழ்ச்சி இன்ப அதிர்ச்சி

   வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ,மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கலந்துரையாடினார்.

   உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

  10 பள்ளி மாணவர்களுக்கு செல்வ மகள் திட்டத்தில் சேமிப்பு கணக்கு துவங்கி வழங்கப்பட்டது.

   இதில் மாணவர்களின் எதிர்கால ஆசைகளையும் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

 அப்போது சத்துவாச்சாரி அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி துர்கா தேவி, தாம் படித்து கலெக்டர் ஆக வேண்டுமென ஆசையை கூறினார்.

   அவருக்கு வாழ்த்து கூறிய கலெக்டர் யாரும் எதிர்பாராத வகையில் அந்த மாணவியை ஆட்சியர் இருக்கையில் அமர வைத்து, மாணவியின் ஆசை நிறைவேற வேண்டுமென வாழ்த்தினார்.   இதனால் அந்த மாணவி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு மாணவியின் ஆசையை ஆட்சியர் நிறைவேற்றியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.