மணிப்பூர் வன்முறையை கண்டித்து காட்பாடியில் பேரணி! கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!!

கு.அசோக்,
மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுத்து நிறுத்த கோரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வேலூரில் அமைதி பேரணி நடத்தினர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அக்சிலியம் கல்லூரி அருகிலிருந்துலிந்த பேரணி புறப்பட்டது.
கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக மணிபூர் மாநிலத்தில் நடைபெற்றுகொண்டிருக்கும் கொடுமைகளையும் வன் முறைகளையும் கண்டித்தும் அங்கு அமைதி நிலவ மணிப்பூர் மாநில அரசும் மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க கோரி அருட்பணி சுந்தர் தலைமையில் அமைதி பேரணியானது துவங்கியது.
இதனை அருள் சேகர் துவங்கி வைத்தார் இந்த பேரணியானது ஓடைபிள்ளையார் கோவில், சில்க் மில் நிறுத்தம் ரவுண்டானா வழியாக டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தை வந்தடைந்தது.
பேரணியில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கிறிஸ்தவ நிறுவனத்தினர் கையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர்.
இதில் ஒருங்கிணைப்பாளர் தாஸன் உள்ளிட பலர் கலந்துகொண்டு கையில் கருப்பு மற்றும் வெள்ளைகொடிகளுடன் ஊர்வலத்தில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.