பூமி பூஜையில் அமைச்சர் எ.வ.வேலு!1400 பண்ணைகுட்டை அமைக்கும் பணி!!

பூமி பூஜையில் அமைச்சர் எ.வ.வேலு!1400 பண்ணைகுட்டை அமைக்கும் பணி!!

ஜி.கே.சேகரன்,

 ஊரக வளர்ச்சி துறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1400 பண்ணைகுட்டை அமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சார் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

 திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாரம்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 1400 பண்ணைகுட்டை அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

   இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. திட்ட இயக்குனர் செல்வராசு, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,  ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை உருவாக்கியவர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தற்போது பண்ணை குட்டை ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளார்.

  இலவச மின்சாரத்தை கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியவர் டாக்டர் கருணாநிதி என்றும்,  அவரின் வழியில் தற்போது முதல்வர் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பண்ணை குட்டை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.  208 ஊராட்சிகளில் சுமார் 28 கோடி ரூபாயில் பண்ணை குட்டை அமைக்க  முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

  இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பயன் பெறுவர்.  இந்த மாவட்டமானது விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. 

  தமிழ்நாடு முதலமைச்சர் நீர்வளத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சரை நியமித்து அனைத்து நீர் நிலைகளையும் மேம்படுத்துவதற்காக அயராவது பாடுபட்டு வருகிறார்.

   இந்தப் பண்ணை குட்டை அமைப்பதின் மூலமாக திருப்பத்தூர் தண்ணீர் நிரம்பி இருக்கிற மாவட்டமாக மாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.  இதில் அரசு அதிகாரிகள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்என பல கலந்து கொண்டனர்.