ஷாட் பிலிம் போல நடந்த அ.தி.மு.க.பொதுக் குழு! ஓ.பி.எஸ்.ஸை அவமானப்படுத்திய இ.பி.எஸ். ஆதரவாளர்கள்!

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் மற்றும் அக்கட்சியை பல்வேறு இன்னல்களிலிருந்து தூக்கி நிறுத்திய ஜெ.ஜெயலலிதா ஆகியோர்களின் கல்லரைகள் பக்கமே போகாத ஒ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்.தங்களுக்கான பதவியை குறிவைத்து பொதுக்குழுவை நடத்தினர்.
இன்று சென்னையில் நடந்து முடிந்த அ.தி.மு.க.பொதுக்குழுவானது ஒரு ஷாட் பிலீமை போல ஓடி நிறைவு பெற்றது. இதில் கலந்துக் கொண்ட ஓ.பி.எஸ்ஸை இபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் மிகுந்த அவமரியாதை செய்து அனுப்பிவைத்தனர். பார்க்க எல்லாமே செம செட்டப் என்பது நன்றாகவே புரிந்தது.
இது பற்றின விவரம் வருமாறு,
கடந்த ஒன்பது நாட்களாக இருந்த பரபரப்பான சூழலில் சென்னை வானகரம் ஸ்ரீவாருமண்டபத்தி அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
இந்நிலையில், ஆவேசமாக எழுந்து வந்து மைக்கை பிடித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 23 தீர்மானங்களை பொதுக்குழு நிராகரிக்கிறது என்று அவரது பாணியில் ஆவேசமாக சொன்னார். (அந்த 23 தீர்மானங்கள் என்னென்ன என்பதை அரங்கில் வாசிக்கவேயில்லை).
அவர் சொன்னது அரங்கில் இருந்தவர்களுக்கு அவ்வளவாக புரியவில்லை. எனவே அதன் பின்னர் பேசிய கே.பி.முனுசாமி, அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது வருகிறதோ அப்போதுதான் 23 தீர்மானமும் நிறைவேறும் என்று அறிவித்தார்.
ஆகவே இந்த கூட்டத்தில், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
அதே வேளையில், தமிழ் மகன் உசேனை அவைத்தலைவராக நியமிக்கலாம் என்கிற கருத்தை இ.பி.எஸ். அறிவித்தார், அதை அவை ஏற்றுக் கொண்ட பின்னர் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமித்த குரலால் அவர் அவைதலைவரானார்.
பின்னர் சி.வி. சண்முகம், அவைத்தலைவரிடம் மனு ஒன்றை கொடுத்தார்,அதை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் ஏற்றுக்கொண்டதோடு வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும், என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்அறிவித்தார்.
பின்னர் வைகைச்செல்வன் பேசிக் கொண்டிருந்தார், அப்போது அரங்கில் ஓ.பி.எஸ்ஸிக்கு எதிரான கோஷங்கள் எழ்ழுந்தன. அதை அடக்கிவாசிக்க இ.பி.எஸ்.தரப்பு முயலவில்லை. இந்நிலையில் ஒ.பி.எஸ்ஸின் மீது வாட்டர் பாட்டில் வீசப்பட்ட்டது.
நிலமையை புரிந்துக் கொண்ட ஒ.பி.எஸ்., உடனிருந்த வைத்தியலிங்கத்தின் காதில் ஏதோ சொன்னதும் அவர்கள் மேடையை விட்டு புறப்பட்டனர்.ரப்போது வைத்தியலிங்கம் மைக்கை பிடித்து சட்டத்துக்கு புறம்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவுமே செல்லாது என்று அறிவித்தார்.
பின்னர் கூட்டத்தினர் நடுவே ஓபிஎஸ்ஸை பத்திரமாக அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் வந்த பிரச்சார வண்டியின் டயரை யாரோ பஞ்சர் செய்துவிட்டிருந்தார்கள்.
இந்நிலையில், வைத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில், அ.தி.மு.க.வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்கள்-சட்டத்துக்கு புறம்பான முறையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. புதிய பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது செல்லாது என்று சொன்னார்.
இந்த பொதுக்குழு மேடையில் இ.பி.எஸ். தனது செயல்களை பந்தாவாக மாற்றிக் கொண்டிருந்தார்.
தனக்கு மாலை போட வந்தவர்களை பார்த்து ஆவேசமாக திட்டினார். கொஞ்சம் இருங்கப்பா, என்று நாக்கை நீட்டினார். ஒருகட்டத்தில் முனுசாமியை பார்த்துக்கூட ஆவேசப்பட்டார்.
ஓ.பி.எஸ்.தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று அதிகாலை வெளியான தீர்ப்பு இ.பி.எஸ்ஸிக்கு சாதகமாக வந்திருக்குமேயானால் காட்சிகள் கொஞ்சம் ஓவராகவே இருந்திருக்கும்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் நீதிமன்றத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்று ஏற்கனவே லைவ் லுக் செய்தியில் தெரிவித்தத்தைப்போல இனி வரும் காலங்களில் அ.தி.மு.க. வில்அதிகாரத்தை பிடிக்க நீதிமன்றமே வழிகாட்டும்,
ஏன்னா இன்றைக்கு நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டமானது தொண்டர்களின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை.
குறிப்பு:- பொதுக்குழு முடிந்த பின்னர் இ.பி.எஸ்ஸிக்கு மலர் கிரீடம், ஆளுயர மாலை போட்டு காலில் விழுந்த சிலர், அவரிடம் ஆசி பெற்று பந்தா காட்டும் நிகழ்வு நடந்தன.