அதிமுக பொதுக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

அதிமுக பொதுக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!

Ma.ba.Gajaraj

அதிமுக ஒற்றை தலைமையை மையப்படுத்தி  எழுந்தபிரச்சினை நீதிமன்றங்களின் வாயிலை தொட்டது.

இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவையாவும் பொது குழுவுக்கு தடை கோரிய மனு வாகும்.

இந்நிலையில் அரசியல் கட்சி என்ன தீர்மானம் போட வேண்டும் எப்படி போட வேண்டும் என்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்து அதிமுக வின் பொதுக்குழுவுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறது.

ஆகவே எந்த கட்டுப்பாடு இன்றி அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நாளை நடைபெறும்.

இதில் ஓபிஎஸ் கலந்து கொள்வாரா? மாட்டாரா என்பது தான் ஹைலைட் .