விபத்தில் இறந்த பெண் காவலரின் உடலுக்கு அமைச்சர் காந்தி அஞ்சலி!

  கு.அசோக்

சென்னை தலைமைச்செயலகத்தில் மரம் விழுந்து உயிரிழந்த பெண் காவலரின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர்  காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனூர் பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவர் சென்னையில் தலைமைசெயலகத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இதனைத் தொடர்ந்து உயிரிழந்த கவிதாவின் உடல் அவரது சொந்த ஊரான ஆற்காடு அடுத்த காவனூருக்கு  கொண்டு வரப்பட்டது.

  இதனை தொடர்ந்து காவனூர் பகுதிக்கு நேரில் சென்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கவிதாவின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  அப்போது அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் ஆர்.காந்தி உயிரிழந்த கவிதாவின்  குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசால் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

  உடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,  ஒன்றிய குழுத்தலைவர் அசோக், துணைத்தலைவர் ரமேஷ்,மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.