மாடு மேய்பவருக்கு ஓட்டுரிமை இல்லையா?

மாடு மேய்பவருக்கு ஓட்டுரிமை இல்லையா?

ஜி.கே.சேகரன்,

 மாடு மேய்த்தாலும் நேரத்திற்கு ஜனநாயக கடமை ஆற்ற வந்தவருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதால், சாவடியை விட்டு மனம் குமுறி வெளியேறினார் ஒரு பாமரர்.

 திருப்பத்தூர்மாவட்டம், ஜோலார்பேட்டை,கந்திலி,திருப்பத்தூர்,நாட்றம்பள்ளி உள்ளிட்ட ஆகிய 4 ஒன்றியங்களில் தேர்தல் அமைதியான முறையில் நடந்தது.

 இந்த நிலையில், ஆண்டியப்பனூரை சேர்ந்த கனகராஜ் என்ற பாமர வாக்காளர் மாலை 5 மணிக்கு வாக்களிக்க வந்தார். அவர், இருனாம்பட்டு அரசு பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க வரிசையில் நிற்க சென்றார்.

  ஆனால் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் காவல்துறையினர் அவரை வாக்களிக்க அனுமதிக்க மறுத்துவிட்டனர். 

   இதனால் கனகராஜ் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை காண்பித்து நான் மாடுகளை மேய்த்துவிட்டு சரியாக ஐந்து மணிக்கு வாக்களிக்க வந்தேன் அனைத்து அடையாள அட்டைகளையும் வைத்துள்ளேன் ஆனால் என்னை ஜனநாயக கடமையாற்றவிடாமல் ஓட்டுபோடவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.

  இந்த நாட்டில் நான் பிறந்தேன் ஆனால் ஓட்டுகூட போடமுடியவில்லை என வேதனையுடன் கூறினார்.

ஆனால் நம்ம அரசாங்க அலுவலர்கள் அவரது ஆதங்கத்தை ஊதாசீனப்படுத்தினர்.

வரது ஆதங்கத்தை ஊதாசீனப்படுத்தினர்.