"அம்மா கிளினிக்" களை தமிழக அரசு மூடியது சரி தான்!

ஜே.தேவபிரகாஷ்,
"அம்மா கிளினிக்" களை தமிழக அரசு மூடியது சரி தான், மேலும், டெல்லி போல் தரமான "முஹல்லா கிளினிக்"களை தமிழக அரசு துவக்க வேண்டும் என்று ஆம்ஆத்மிகட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போது 400 க்கும் மேற்பட்ட "அம்மா கிளினிக்" திறந்ததாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்தார்.
முறையாக ஆரம்பிக்கப்படாத அந்த அம்மா கிளினிக்களை தான் செய்த பெரிய சாதனையாக கருதி தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கினா£.¢ உண்மை என்னவென்றால் ஒன்றிரண்டு அம்மா கிளினிக்களைத் தவிர வேறு எங்கும் அம்மா கிளினிக்கள் எதுவும் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை, சரியாக நிர்வகிக்கபடவில்லை. மக்கள் பயன்பாட்டிற்கு முறையே வரவில்லை.
அம்மா கிளினிக் திட்டம் என்பது நல்ல திட்டம் வரவேற்கத்தக்க திட்டம் தான் . ஆனால் அதிமுக முன்னால் முதல்வர் பழனிசாமியின் கடந்தகால அரசு ஒழுங்காக அம்மா கிளினிக்கள் சரியாக செயல்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டுமே பயன்படுத்திவிட்டு இப்பொழுது அம்மா பெயரில் இருப்பதால் திமுக அரசு முடுகிறது என்று சப்தமிடுவது வேடிக்கையானது.
முறையே ஆரம்பிக்கப்படாத இந்த அம்மா கிளினிக்குகளில் ஏராளமாக மக்கள் பணம் விரயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தரமில்லாத இந்த அம்மா கிளினிக்களை தற்போது திமுக அரசு மூடியது சரியே அதை தமிழக ஆம்ஆத்மிகட்சி வரவேற்கிறது.
அதே நேரத்தில் டெல்லியில் மாநில முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மிகட்சி ஆட்சியில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மஹால்லா மருத்துவமனை அணைத்து சுகாதார வசதிகளுடன் திறக்கப்பட்டு முதல்வரின் நேரடி பார்வையில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதனால் டெல்லியில் ஏழை மக்கள் நடுத்தர மக்கள் அனைவரும் இந்த முஹல்லா மருத்துவமனையால் (சிறிய மருத்துவமனை) பயன்பெற்று வருகிறார்கள். குறிப்பாக இது முதியோர்களுக்கும் சிறுவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
எல்லா வியாதிகளுக்கும் பெரிய மருத்துவமனை அரசு மருத்துவமனைகளை சென்று வைத்தியம் பார்க்க வேண்டிய சூழ்நிலையை ஆங்காங்கே சிறிய சிறிய மருத்துவமனைகளை துவக்கி எல்லோருக்கும் நன்மையைத் தரக்கூடியதாக இந்த முஹல்லா கிளினிக்குகள் டெல்லியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் 200 வகையான உடல் பரிசோதனைகள் அங்கு செய்யப்படுகிறது மருத்துவர் செவிலியர் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான அணைத்து மருந்து வகைகளும் அங்கே கொடுக்கப்படுகிறது. முஹல்லா கிளினிக் திட்டம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக டெல்லியில் நடந்து வருகிறது.
டெல்லி ஆம்ஆத்மிகட்சி ஆட்சியின் இந்த முஹல்லா கிளினிக்களை வெற்றி திட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழக அரசும் முறையே தமிழகம் முழுவதும் கொண்டு வந்தால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக இது அமையும்.
வீடு தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது இதுவும் வரவேற்கத்தக்கது அதே நேரத்தில் இந்த "முஹல்லா கிளினிக் "பகுதி கிளினிக்" துவாக்குவது மிக அவசியம் ஆகும்.
அம்மா பெயரில் "அம்மா கிளினிக்ஸ்" ஆரம்பித்த அதிமுக அரசு தரமான சிகிச்சை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை அவர்களிடம் இல்லை.
ஆகையால் அம்மா கிளினிக் என்ற பெயரை அகற்றிவிட்டு மக்கள் கிளினிக் என்றோ அல்லது அரசு கிளினிக் என்றோ அல்லது பகுதி கிளினிக் என்றோ தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.