மஞ்சப் பைக்கு பச்சைக்கொடி காட்டிய வேலூர் கலெக்டர்!

மஞ்சப் பைக்கு பச்சைக்கொடி காட்டிய வேலூர் கலெக்டர்!

  த.நெல்சன்,

   ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆப., அவர்கள்  வேலூர் கோட்டை காந்தி சிலை அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாநகராட்சி ஆணையர் திரு.பி.இரத்தினசாமி, இ.ஆ.ப., மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் திரு.ரவிச்சந்திரன், 2வது மண்டல குழு தலைவர் திரு.நரேந்திரன் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும்  வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட் வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது.

 இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் திரு.பி.இரத்தினசாமி, இ.ஆ.ப., மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.