பள்ளி குழந்தைகளை அடித்து காயப்படுத்திய ஆசிரியை ஜீவா மீது போலிசில் புகார்!

அ.தேவி,
ஆங்கில தேர்வுகளை சரியாக எழுததால் பள்ளி குழந்தைகளை தாக்கிய ஆசிரியர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. காயமடைந்த குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இந்த மலையில் சுமார் 14 கிராமங்கள் உள்ளன. இங்கு நிலாவூர், அத்தனாவூர், மங்களம், உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் உள்ளது.
அப்படியிருக்க அத்தனாவூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 135 மாணவர் மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இப்படி மேற்படி 135 மாணவ, மாணவிகளையும் இரு ஆசிரியர்கள் மட்டுமே வழி நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜீவா என்ற ஆசிரியை மூன்றாம் வகுப்பு மாணவ மாணவிகளை ஆங்கில தேர்வு வைத்துள்ளார். தேர்வை பூவரசன், தமிழரசி,நிஷாந்தினி,சசிரேகா,புவிநிலா, ஆகியோர் சரிவர எழுதவில்லையாம்.
இதனால் பள்ளிக் குழந்தைகளை பிரம்பால் கம்பு எடுத்து கால்களிலும்,தலையிலு அடித்து காயப்படுத்தியுள்ளார்.
அதன் பின்பு மாலை வீட்டிற்குச் சென்று குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அழுது கூறியுள்ளனர்.
தலையிலும், கால்களிலும் காயங்களைப் பார்த்த பெற்றோர்கள் பதறி கொண்டு ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் பின்னர் ஏலகிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.