கட்டி முடித்த பாலம்:- 15 நாட்களுக்குள்ளே பூமிக்குள் அமுங்கியது!

க.பாலகுரு,
கீழ்வாசல் என்கிற பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் 15 நாட்களுக்குள்ளே பூமிக்குள் அமுங்கிவிட்டது.
இதுபற்றின விவரம் வருமாறு,
தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல், சிராஜ் நகரில் தஞ்சாவூர் - ராமேஸ்வரம் செல்லும் பழயை பிரதான சாலை உள்ளது. இங்கு அமைந்துள்ள ஆதாம் வாய்க்கால்களில், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி சுமார் 6.5 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இதில் உள்ள சிறிய பாலம் ஒன்று ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் சில நாட்களுக்கு முன் கட்டப்பட்டது.
அப்படியிருக்க, அந்த பாலமானது 15 நாட்களுக்குள்ளேயே பூமிக்குள் அமுங்கிவிட்டது.
மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரியின் பாரத்தை தாங்காத பாலம் அவ்வாறு அமுங்கிவிட்டது.
லாரியின் பின் சக்கரம் பாலத்தின் ஈடுபாட்டுக்குள் சிக்கிக் கொண்டது.
“மதுரையைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவத்தின் பணியை தரமாக செய்யாததே இந்த விபத்துக்கு காரணம்.
ஏற்கனவே இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மக்கள் மனு அளித்துள்ளனர்.
ஏன்னா இந்த பணியின் போது கால்வாயின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதை மீண்டும் அவர்கள் கட்டினார்களாம்.
விபத்து நடந்த பகுதியை மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பணி முடிந்து 15 நாட்கள்தான் ஆகிறது. ஆகவே இந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி லாரி அதிக பாரத்துடன் வந்ததே விபத்துக்கு காரணம். இந்த விபத்து காரணமான லாரி ஓட்டுநர் மீதும், அதன் உரிமையாளர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலத்தை லாரி உரிமையாளர்கள் கட்டி தருவதாக கூறியுள்ளனர்” என சொன்னார்.
அப்ப, சூப்பர் பாலத்தை கட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லீங்களா சாமி?